நடைப்பயணம்
ஆனந்தம் தருவதில்லை
இலை உதிர்வு !
பூலோக மேடையிலே
வந்து போகும் காலத்தின்
இடைநிலை
ஒரு மரணத்தை
நினைவூட்டுகிறது....!!
காலத்துக்கு காலம்
மரணத்தை பதிவிட
காற்று அள்ளி செல்கிறது
இறந்துகிடக்கும் சருகுகளை !
மலையில் இருந்து
தனக்கான தேர்வில் வழிந்தோடும்
நீரின் மேல் பயணிக்கின்ற
குமிழி ஒன்று நம்பிக்கையுடன் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக