திங்கள், 20 செப்டம்பர், 2021

காலத்தின் முகம்

 ஆரோக்கியத்துக்கு
நடைப்பயணம்
ஆனந்தம் தருவதில்லை
இலை உதிர்வு !

பூலோக மேடையிலே
வந்து போகும் காலத்தின்
இடைநிலை
ஒரு மரணத்தை
நினைவூட்டுகிறது....!!

காலத்துக்கு காலம்
மரணத்தை பதிவிட
காற்று அள்ளி செல்கிறது
இறந்துகிடக்கும் சருகுகளை !

மலையில் இருந்து
தனக்கான தேர்வில் வழிந்தோடும்
நீரின் மேல் பயணிக்கின்ற
குமிழி ஒன்று நம்பிக்கையுடன் !

இறப்பு இல்லை தளிர்ப்பேன் என்ற
தன்னம்பிக்கையில்
வரப்போகும் வசந்தகாலத்தை
காத்திருக்கின்றது உதிர்ந்த
மரம் ஒன்று !

-பங்கிரையான்-












கருத்துகள் இல்லை: