திங்கள், 20 அக்டோபர், 2014

ஏற்கமறுக்கும்பயணம்

இரத்த கறை படிந்த
நினைவுகளைமறைத்து
கருப்பு கம்பளத்தால் போர்த்த
சாலையில் மேல் ஏக்கத்துடன்
பயணிக்கின்றேன் !

திரும்பிய திசையெல்லாம்
திட்டுதிட்டாய் வலிகளின் ஞாபகக் கறை ... !

நான் செவிக்கும் இசையெல்லாம் கேட்கிறது
தமிழ் இனத்தின் வறுமை குரலாய் ... !

இதயம் துடிக்க மறுத்தும் ..
கண்ணீர்தீர்ந்து இரத்தம் கசிந்தும் !

வாழவேண்டும் என்று ...
யசிக்கின்ரர்கள்இன்னும் சில காலம் .. !
எம் இனம்  எம் மக்கள் எம் மொழி .

கருத்துகள் இல்லை: