செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

கலை அரங்கம் -பங்கிரையன்-


ஒருத்தி
ஒரு மேடை
இரு அரங்க பிரவேசம்
சனிக்கிழமை மாலை 11.12.2023 அன்று நோர்வே ,லிலஸ்ரோம்(lillestrøm samfunnshus ) கலாசார மண்டபத்தில் நிறைவான பார்வையாளர்கள், பெருமைமிக்க கலைஞர்கள் ,கலை விமர்சகர்கள் மத்தியில் பதினைந்து வயதுடைய சிறுமி அஞ்சனா ராஜகோபால் அவர்களின் ஒன்பது வருடங்களுக்கு மேல் கர்டாக இசையையும் பரத கலையையும் முறைப்படி கற்று ஒரே நாளில் அரங்க பிரவேசம் ஒப்பேரியது.
*#பகுதி ஒன்று
குரலிசை
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தனது குரலினால் தனக்கென்று ஒரு தனித்தடம் பதித்த முனைவர் சுயம்பு ஹரிஹரன் அவர்களிடம், தான் கற்ற கருநாடக பாரம்பரிய இசை , வகைப்படுத்தப்பட்ட இசையின் இராகங்களின் இலக்கணங்கள் தெளிவாக இசையில் அமைந்தவன்ம் நிகழ்வு இருந்தது
அஞ்சனா ராஜகோபால் கருநாடக பாரம்பரிய குரலிசை மற்றும் இசைக்கருவியில் நன்கு பயிற்சி பெற்றவராவார் என்பதால் அவரின் குரலில் இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்கள் குறிப்பிடத்தக்கது .
அஞ்சனாவின் குரலின் இனிமையை மெருகூட்டிய பக்கவாத்திய கலைஞர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்
இரண்டுமணிநேரம் அரங்கத்துக்கு வகைப்படுத்தப்பட்ட இசையை தளர்வின்றி ஒப்பேற்றினார் அஞ்சனா
இந்த மடந்தை பருவத்தில் அவரின் திறம்மை மிகவும் பாராட்டுக்கு உரியது . வாழ்த்துக்கள்
*#பகுதி இரண்டு
பாரதம்
லயன் நடனப் பள்ளியின் நிறுவனர்,கவின்கலை வல்லுநர் நாட்டியக்கலாயோதி அஞ்சனா ராஜகோபால் அவர்களின் அக்கா அஞ்சலி ராஜகோபால் அவர்களின் முதலாவது பரதநாட்டிய ஆற்றுகையில் தங்கையின் நாட்டியம்
பரதக்கலையின் ஆரம்ப அங்கமாகிய மல்லாரி நடனத்தை அரங்கினில் நிகழ்த்தி மலர்தனை தூவி இறை பணிந்து, குருவிடம் சென்று ஆசியை பெற்று, இசைக்கலைஞர்களுக்கு சிரம்தனை தாழ்த்தி, மக்களை வணங்கி .அரங்கேறியது நடனம்
அஞ்சனா ராஜகோபால் நவரசத்தில் ஒன்பது வித உணர்வுகளை வாழ்க்கைப்பற்றிய சுலோகங்களில் அந்தந்த உணர்வுகளுக்கேற்ற ராகங்களில் தேர்வின் பாடியமுறை அடுத்தடுத்து முகபாவங்களின் பிரதிபாலித விதம் யாவும் பிரமாதம் .
நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் அமைந்தன எமது தலைமுறையின் நடனக் கலையில் புதிய பலதோற்றங்களை உருவாக்கி அக்கலையை விரிவடையச் செய்துள்ளமை புதுமையாகவே உணரமுடிந்தது
கலைகள் அனைத்தையும் பார்வையாளருக்கோ ரசிகருக்கோ வழங்குகின்ற போது அவற்றில் சில நெறிமுறைகள், பொருளமைப்பு, பொருத்தப்பாடு, அழகியல் அம்சங்கள் முதலியன நடன அமைப்பில் கவனிக்கப்பட்டிருப்பது மகிழ்வுக்குக்குரிய விடயம்
சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு வழங்கப்படும் கலை நிகழ்ச்சியினை அதாவது பரதநாட்டியக் கலை நிகழ்ச்சியினை ஜனரஞ்சகமாக தொகுத்து இக்கலைக்குரிய பாவம், அபிநயம், இசை முதலியவையும் சமய சார்புகளும் பிறவும் தகுந்த முறையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சி நிரல் இடம்பெற்றது மிகவும் சிறப்பம்சம்
அஞ்சனா,அஞ்சலி ராஜகோபால் இரு சகோதரிகளின் ஆளுமை எதிர்காலத்தில் உயர்ந்த நிலை தொடக்கூடியவை
இசைக்கலைஞர்களும் இணைந்து நிகழ்வை சிறப்பாக்கினர். இசைக்கலைஞர்களை உற்சாகப்படுத்தி நடனமும், நடனத்தை உற்சாகப்படுத்தி இசைமுழக்கமும் இடம்பெற்றதால் அபிநயம், இராகம் தாளம் என்பன நன்றே அமைந்தது
*#பிரதம விருந்தினர் உரையாற்றிய, தயாளன் வேலாயுதபிள்ளை காத்திரமான சில குறிப்புகளை முன் வைத்து உரையாற்றினார்,நட்பின் மகத்துவம், தணித்தாயின் பெருமை , அக்கா ,தங்கை உறவு ,அடுத்த தலைமுறையின் நகர்வு ,அக்கா தங்கைக்கு நடனம் பயில்வித்து அரங்கேற்றம் செய்வதன் சவால் , நிகழ்வின் கதாநாயகியின் அரங்கத்துக்கேற்ற ஆளுமை ,தன்னியல்பான நுகர்வு மாற்றம் சமநிலை அணுகுமுறை, வியக்கதக்க என்றும் அஞ்சனா, அஞ்சலி ராஜகோபால் அவர்களை மனம் நிறைந்து வாழ்த்தினார்
நோர்வே நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைமுறை அழியக்கூடாது என்பதற்க்காக மொழி, கலை, பண்பாடு விழுமியங்களை உரமிட்டு வளத்தவர்கள் ஒதுக்கப்படுகின்றனர் அவர்கள் உள்வாங்கி செய்லபடவேண்டும் என்றும் #உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றவரு உரை முடிவு இருந்தது
*#சிறப்பு விருந்தினர் கவிதாலட்சுமி கற்கை முறை சார்ந்த பார்வையில் இளம் தலைமுறை கலைஞர்கள் படைப்புகளை எப்படி அணுகிறார்கள், அவர்களின் மனவோட்டங்கள் என்ன .குறுகிய நேரத்தில் தர்க்கமான அறிவுரை சார்ந்த வாழ்த்துரையை வழங்கினார்.
இனி வரும் காலங்களில் நோர்வேபல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி ,எமது பண்பாட்டு கலைகள் கற்கலாம் என்றும் அதற்கான கற்பித்தல் முறைகள் உருவாக்கி இருப்பதாகவும் கூறினார்
மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட ஒரு அரங்கேற்றம். ஆடையலங்காரம் ஒலி, ஒளி அமைப்பு, மேடை ஒழுங்கமைப்பு என்பனவும் பாராட்டுக்குரியது.
வெறுமனமே அரங்கேற்றம் என்று பாராது, அரங்கேற்றத்திற்கு பின்னாலுள்ள உழைப்பும் சிந்திக்கப்பட வேண்டியது
"எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் இந்த மண்ணில் பிறக்கையில்லே
நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னைவளர்ப்பிலே "
என்ற பாடலுக்கு அமைய ஒரு தனிமை தாயின் தலைமைத்துவ ஆளுமை
நடந்தேறிய தன் மகளின் அரங்கபிரவேச நிகழ்வு
புலம் பெயர் நாட்டில் பிறந் இன்றைய பிள்ளைகளே நாளைய தலைமுறையினர் என்றால், அவர்களை அந்நிலைக்கு ஆளாக்கிய தாய்மார்கள் மதிப்புக்கும் மரியாதைக்கும் ஆதரவுக்கும் தகுதியானவர்கள்
இந்தவரிசையில் மூன்று பிள்ளைகளின் தாயார் அமிர்த மயில்வாகனம் நடந்தகால நிகழ்வுகளைவிட , பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளுக்காக வாழும் தாயின் சாதனையே
தமிழ் பண்பாட்டின் ஒரு தாயின் பெருமை வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை: