செவ்வாய், 6 ஏப்ரல், 2021

மூடிய உலகம்




நாளை நாளை என்று தினங்களும்,

வருடங்கள் ஆகிவிட்டன

தூரத்தில் வைத்து பார்த்து பார்த்து

உறவுகளும் துரமாகிவிட்டன


மூடிய கதவுகள் இனி

முற்றுப்புள்ளியில் இருந்தே

திறக்கப்படுமா ?

தொலைத்த நாட்கள் எல்லாம்

ஒரு புது முகவரியை தேடிவரும் !

கனவுகள் கூட சுமைகள் ஆகின்றன

ஆனால் நம்பிக்கைகள் மட்டும்

விரும்பியோ ,விரும்பாமலோ

சுமக்கிறது தோள்கள் ...!

நாளையை நம்புவோம்

நாளை என்பது நம்பிக்கை

நாளை என்பது நீயும் ! நானும்!


-பங்கிரையான்-




கருத்துகள் இல்லை: