
தென்னிலங்கை "கலை, கலாசார விழா2019 "பிரதிபா" நேற்று 28.09.19 சுவரசிக்கமாகவும் ,நேர்த்தியாகவும் ஒழுக்கமைக்கப்பட்டு அரங்கம் நிரம்பிய ரசிகத்திரளை கவர்வது
இந்த நிகழ்வு தென்னிலங்கை தமிழ் சிங்களவர்கள் நடத்தும் நிகழ்வாகவே உணரக்கூடியதாக இருந்தது
குறிப்பிட்ட நேரத்துக்குள் நிகழ்வுகள் தொடக்கி முடிந்தன பாரட்டக்கூடியது

தென்னிலங்கை கலாசாரம் பல்வேறுபட்ட காரணிகளால் தாக்கம் செல்லுத்தப்பட்ட போதிலும்
இன்று பௌத்த பரம்பரையை கொண்டு இசை, நடனம், காட்சிக் கலை ஆகிய நுண் கலைகளை
தன்னகத்தே தக்கவைத்துள்ளது என்பதே உணரமுடிந்தது
நிகழ்வு உள்வாங்களில் பௌத்த தொல்லியல் கலையான கண்டிநடனம் பௌத்த விழாக்களில் ஆடப்பட்டு வந்த நிகழ்வை ஒரு அரங்க நிகழ்வாக மாற்றி நடனத்துக்கு மெருகூட்ட பாரம்பரிய தென்னிலங்கை இசையான கண்டி மேளத்தினை (கெட்ட பெரய) உள்ளடக்கி ஆடை அலங்காரம், உள்கட்டமைப்புகாட்சி என சிறப்பாக முறையில் இத்தாலியில் இருந்து வருகை தந்த கலைஞர்களால் அரங்கம் மிளிர்ந்தது

நிகழ்வுகள் வரையறையான முறையில் , சமூகம், கலாச்சாரம், அழகியல், கலை, தார்மீக நெறிமுறைகள் மற்றும் சில வாழ்வியல் சார்ந்த முறையில் அமைந்தது .
சில நாட்டுப்புற நடனங்கள் முறைப்படுத்தப்பட்டு, சில கலை நுணுக்கத் திறன் நுட்பங்கள் இணைக்கப்பட்டதை இங்கு குறிப்பிடலாம்

இந்த நிகழ்வில் நோர்வேயிய இளையோர்களையும் இணைத்து இந்த நடன நிகழ்வுகள் நடந்தது இவர்களின் ஆடலில் அழகியலையும் விதி முறைகளையும் நுண்ணியமாக கையாண்டுள்ளார் இவர்களையும் வாழ்த்த வேண்டும்

இடைவேளை நேரத்தில் தென்னிலங்கை பாரம்பரிய சிற்றுண்டி கலாசாரத்தை உணரக்கூடிய முறையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டது . இதுக்கும் ஒரு இனத்தை தக்கவைக்கும் செயல்முறையாகவே உள்ளது
ஒரு நிகழ்வு முறையில், இந்த செயல்முறை , இனங்களின் சுய விழிப்புணர்வு அதன் வலுவான இனத்துவத்தின் கலாச்சாரம், பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைகளுக்கு நகர்த்தும் செயல்முறையாகவே பார்க்கின்றேன்

நிகழ்வின் முடிவில் அனைவரும் எழுந்து நின்று இனங்களின் விடுதலைக்கான கோஷங்களுடனே முடிந்தது
விமர்சன சிந்தனை தொகுப்பு: சன் நரேந்திரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக