கவிதையால் மனம் நிறைந்தே வாழ்கிறேன்
நினைவில்
நகர்ந்து கொண்டே இருக்கிறேன்
நகராமல்
விழித்துக்கொண்டே இருக்கிறேன்
விழிக்காமல்
சிரித்துக்கொண்டே இருக்கிறேன்
சிரிக்காமல்
கனவுகண்டே இருக்கிறேன்
கனவில்
மனம் குளிர்ந்து போகிறேன்
மனதில்
தினம் நனைந்தே போகிறேன்
தினமும்
கவிதை சாலை போகிறேன்
கவிதையால்
மனம் நிறைந்தே வாழ்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக