ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

கவிதையால் மனம் நிறைந்தே வாழ்கிறேன்


















நினைவில் 
நகர்ந்து கொண்டே இருக்கிறேன் 

நகராமல் 
விழித்துக்கொண்டே இருக்கிறேன் 

விழிக்காமல் 
சிரித்துக்கொண்டே இருக்கிறேன்

சிரிக்காமல்
கனவுகண்டே இருக்கிறேன்

கனவில்
மனம் குளிர்ந்து போகிறேன்

மனதில்
தினம் நனைந்தே போகிறேன்

தினமும்
கவிதை சாலை போகிறேன்
கவிதையால்
மனம் நிறைந்தே வாழ்கிறேன்

கருத்துகள் இல்லை: