கண்ணோடு எந்நாளும் மறையாத
கனவொன்று நான் கண்டேன்...
விலையில்லா புன்னகை இதழோடு
பூக்ககண்டேன்...
மனதோடு மறையாத முகமொன்று
என்னை புதுவித உணர்வுக்குள் தள்ள கண்டேன்...
வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் என்னை சுற்றி பறக்க கண்டேன்...
இதுதான் உன்னை நேரில்
கண்டதும் உணர்ந்து கொண்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக