ஞாயிறு, 22 மே, 2016

அந்த மூன்று நாட்கள்

எக்ஸைல் 1984
- நடேசன்
எழுதிய பேனையை மேசையில் வைத்துவிட்டு சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். அந்த noel Nadesan-1அறையில் இருந்தவர்கள் ஈழ விடுதலைக்காக போரிட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள். ஏனக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் டாக்டர் சிவநாதன், டாகடர் ஜெயகுலராஜா, டாக்டர் சாந்தி இராஜசுந்தரம்.

எனக்கு வயிற்றைக் கலக்கியது. அமைப்பின் காரியதரிசியாக இருந்து தமிழர் மருத்துவ நிலயத்தில் நடந்த கூட்டமொன்றில் விபரங்களை குறிப்பெடுத்த என்னை நிறுத்த வைத்தது.
வெளியே சென்னை வெயில் தெருச்சண்டியன் போல் ஆர்ப்பரித்தது. அவனது வார்த்தை போல் உள்ளே வந்த காற்று சூடாக இருந்து. சூளைமேடு நெடுஞ்சாலையில் போகும் வாகனங்களின் இரைச்சலும் புகையும் மேலே எழுந்து 144 இலக்க முதல் மாடியில் இருந்த எமது காது, மூக்குத் துவாரங்களை மோதி அடைந்தன.

1985 ஜூலை சென்னை மரினா கடற்கரையில் தொடர் உண்ணாவிரம் நடத்த ஈழத்து இயக்கங்கள் தீர்மானித்தன. அதற்கு ஓருங்கிணைப்பாளராக தமிழ் மக்கள் விடுதலைக் கழக வாசுதேவா, என்னை முன்மொழிய விடுதலைப்புலிகளின் யோகியால் கைவிரல் மட்டும் உயர்த்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது

ஏற்கனவே ஈபி ஆர் எல் எவ் தலைவர் பத்மநாபா இப்படி தொடர் உண்ணாவிரம் நடத்த வேண்டும் என என்னிடம் பிரஸ்தாபித்திருந்தார். அக்காலத்தில் விடுதலைப்புலிகளுடன் மற்றய இயக்கங்கள் சேர்ந்து இருந்த காலம். தங்களது ஒற்றுமையை வெளிக்காட்ட அவர்கள் செய்யும் அரசியல் முயற்சி என நினைத்து மறந்திருந்தேன்

இதில் நான் முன் தள்ளுப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே விடுதலைப்புலிகள் ஆதரவாளர் டாக்டர் ஜெயகுலராஜா இருந்தார். அவர் எமது நிறுவனத்தின தலைவர் மடடுமல்ல வயதாலும் பெரியவர். அத்துடன் வெலிக்கடை பின்பு மட்டக்கிளப்பு சிறைகளில் இருந்தவர்.
அவரை விட்டு என்னை பிரேரித்ததை மற்றய இயக்கங்களும் அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

அக்காலத்தில் இயக்கங்கள் சேர்ந்திருந்தாலும் தங்களுக்குள் செல்லமாக ஒருவரை ஒருவர் சுட்டபடி இருந்தவர்கள். எல்லோரும் ஏகமனதாக ஒருவனை அங்கீகரிக்கும்போது என்னுள் பெருமைக்குப் பதிலாக பயம் ஏற்பட்டது. ஒருவிதத்தில் கிடாய் ஆட்டிற்கு மாலை போடுகிறார்களா என்ற எண்ணம் ஏற்பட்டது.

மனத்தைத் திறந்து நினைத்ததை வெளியே சொல்ல முடியாது. இயக்க ஒற்றுமைகள் பற்றி பலரிடம் நான் வலியுறுத்தியவன். வெலிகடையில் இறந்தவர்கள் பற்றிய விழிப்புணர்வை உண்ணாவிரதம் இருந்து ஏற்படுத்துவது நல்ல காரியம் என்பதாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இதுவரையும் மருத்துவ விடயங்களில் ஈடுபடும்போது மனத்தில் எதுவித தயக்கமில்லை . இந்த விடயம் உண்ணாவிரதம் என்று சொன்னாலும் ஒரு அரசியல் பிரச்சாரம். அதுவும் தமிழக மக்களிடையே ஈழத்தின் தேவையை எடுத்து செல்லும் வழி என்பது புரிந்தால் தயக்கம் ஏற்பட்டது.

வேறு வழியில்லை. ஏற்றுக் கொண்டேன்

அதற்கான வழிமுறைகள் பேசப்பட்டன. இந்தியக் கட்சிகளின் அரசியல் தலைவர்களைக் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளப் பண்ணுவது அதேபோல் தமிழ் இயக்கத் தலைவர்கள் பிரமுகர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. வேலைகள் பிரித்தளிக்கப்பட்டது என்னைப் பொறுத்தவரை அதிக வேலை இருக்கவில்லை. வருபவர்களை வரவேற்பது அவர்களுடன் பேசுவதும் கொடுக்கப்பட்டது.

எந்த இயக்கமும் நேரடியாக உண்ணாவிரதத்திற்கு சம்பந்தப்படவில்லை.

சிலகாலம் முன்பாக யாழ்பாணத்தில் உண்ணாவிரதத்தை குழப்பிய விடுதலைப்புலிகள், உண்ணாவிரமிருந்தவர்களை இந்தியாவுக்கு தூக்கி வந்திருந்தார்கள். மற்றவர்களுக்கும் உண்ணாவிரதம் தங்களது வழியல்ல எனக்காட்ட வேண்டும். இலை குழை எங்கள் உணவு அல்ல. இது சாதாரண ஈழ மக்களின். உண்ணாவிரதம். எல்லாருக்கும் பொதுவானது. இயக்க அரசியல் இல்லாதது எனக் காட்டவேண்டியிருந்தது.

மரினா கடற்கரையில் தெருவிற்கும் மணற்பிரதேசத்திற்கும் இடையில் புல் முளைத்த பிரதேசத்தில் பந்தல் போட்டு பானர் கட்டி மூன்று நாட்கள் நடந்த இந்த உண்ணாவிரத நிகழ்சிக்கு நான் நேரடியாக பல தலைவர்களை சென்று அழைத்தேன். என் நினைவில் இருப்பவர்கள் அக்கால எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் வக்கீலாக இருந்த வானமாமலை போன்ற கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்.

அமிர்தலிங்கம் தம்பதியினரை மிகவும் நினைவில் இருப்பதன் காரணம் வீடு சென்ற அழைத்தபோது அவர்கள் வருவோம் என்று சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்பாக வந்துவிட்டார்கள் மற்றயவர்கள் எல்லோரும் சொல்லிய நேரத்திற்கு பிந்தியே வந்தார்கள்.

கத்தரி வெயில் எரிக்கும் பகல் முழுவதும் உண்ணாவிரதம் நடக்கும். குறைந்த பட்சம் நூறு பேர்களாவது பந்தலில் எப்போதும் இருப்பார்கள். இயக்கத்தினர்கள் தமிழநாட்டு பிரமுகர்கள் பலர் வந்து அமர்ந்து பேசி செல்லுவார்கள்.

வாழ்கையில் விரதமே இருக்காத நான் உண்ணாவிரமிருந்த நாட்கள். பெரும்பாலானவர்கள் வந்து சிலமணி நேரமிருந்து போவதால் ஒரு அடையாள உண்ணாவிரதம் எனத்தான் சொல்லவேண்டும். நாங்கள் எதிர்பார்த்தபடி தமிழ்நாட்டு பத்திரிகைள் எல்லாம் படத்துடன் பிரசுரித்தன.

இந்த நிகழ்சியை இலங்கை ஊடகங்கள் பதிவு செய்தார்களா எனத் தெரியாத போதும் ஈழவிடுதலை இயக்கங்கள் ராஜீவ்காந்தி, ரொமேஸ் பண்டாரி போன்றவர்கள் முன்பாக கட்டாயமாக ஓன்றாக கூட்டங்களில் கலந்து கொண்டார்கள். இவர்கள் மூன்று நாட்கள் தன்னார்வமாக இருந்தததனால் உண்ணாவிரதம் இருந்த நாட்கள் முக்கியமானது.

30 வருடங்கள் பின்பாக இந்த மூன்று நாட்களில் எனது மனத்தில் நிற்கும் இரண்டு விடயங்கள் முக்கியமானதாக கருதுகிறேன்.
உண்ணாவிரதத்தின் முதல்நாள் என்னை நோக்கி மஞ்சள் அரைக்கை சட்டையும் அழகான மீசையும் கொண்ட சிவந்த நிறமான ஒருவர் வந்து கை கொடுத்தார். நானும் கை கொடுத்தவிட்டு பக்கத்தில் நின்ற வாசுதேவாவைப் பார்தேன்

‘இவர்தான் உமா மகேஸ்வரன்’ என்றார்.
uma maheswaran
நான் அது வரையிலும் உமாவை நேரில் பார்த்ததில்லை இலங்கையில் இருந்தபோது படங்களில் பார்த்திருக்கிறேன்.
அவருடன் கை குலுக்கியது எனக்குள் சந்தோசத்தை ஏற்படுத்தவில்லை.

அக்காலத்தில் தமிழர் மக்கள் விடுதலைக் கழகத்தில் நடந்த கொலைகளை கேள்விப்பட்டிருநதேன் அதைவிட எனது மனைவியின் உறவினர் மகன் உமாவின மெய்காப்பாளர்களில் ஒருவராக இருந்தார். அவரது பெற்றோர்கள் இயக்கத்தின் உட்கொலைகளினால் எப்போது மகனை யார் மூலம் இயக்கத்தில் இருந்து கழட்டி கனடா அனுப்பலாம் என்று பேசிக்கொண்டிருந்ததும் அதற்கு அவர்கள் பணம் தருவதற்கு தயாராக இருந்ததும் எனக்குத் தெரியும். இப்படியான விடயங்களால், காணாமலே உமாவின் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது.

உமா பார்பதற்கு அழகான மனிதர் மடடுமல்ல அவரது தோற்றம் தன்னம்பிக்கையை காட்டும் தன்மையுள்ளது. தலைமைக்குத் தேவையான கவர்ச்சி உள்ள மனிதர். இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளில் அமிர்தலிஙகம் அவர்களுக்கு இருந்த அதே கவர்ச்சி உமாவிடம் இருந்தது. தோற்றத்தில் அப்படியானவர்கள் இன்னமும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளில் நான் காணவில்லை ஆனால் அவர்கள் இருவரும் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்பது உண்மை.

உமா மகேஸ்வரன் மீது ஏராளமானவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஒரு காலத்தில் 15000 இளைஞர்கள் அவரை நம்பினார்கள். அதில் 6000 மேல் ஆயுதப் பயிற்ச்சி பெற்றவர்கள். அவரிடம் சிறந்த தளபதிகளாகவும் இரண்டாம் கட்டத்தலைவர்களாக இருந்தவர்கள் பலரை தனிப்பட்டரீதியில் அறிந்தவன். தமிழ்நாட்டில் முதல்வர் எம் ஜி ஆர் கூட நம்பிக்கை வைத்திருந்தார். தன்னிடம் இருந்த சிறந்த விதை நெல்லை சோறாக்கிய மனிதர் என்பது எனது கருத்து. சமீபத்தில் அவரது இயக்கத்தில் முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவரை சந்தித்தபோது அவர் சொல்லிய விடயம் ஆச்சரியம் அளிக்கவில்லை.

அவர் சொன்னார் “ தமிழ்மக்கள் விடுதலைக்கழகத்தின் மத்திய கூட்டம நடக்கும்போது எவரும் குறிப்பு எடுப்பதில்லை காரணம் குறிப்பு லீக்காகிவிடும் என்பதால். ஆனால் உமா எழுதும்போது ஒரு பக்கத்தில் மற்றவர்கள் கருத்தை செவி மடுத்து எழுதுவார்.
ஒரு நாள் மற்றய அங்கத்தவர் சொன்னார் இன்றைக்குப் பார் இந்த குறிப்புக் கடுதாசிக்கு என்ன நடக்கிறது என்று.
நான் தொடர்ந்து உமாவைப் பார்த்தபோது அந்த கடுதாசி ஆரம்பத்தில் மடிக்கப்பட்டது பின்பு வெளியே செல்லும்போது மிகவும் கசக்கப்பட்டு, மெதுவாக நடைபாதையில் எறியப்பட்டது’

இந்த விடயத்தை மனக்கண்ணில் கொண்டுவர வேண்டுமா?

கற்பனை தேவையில்லை

சமிபத்தில் இராஜவரோதயம் சம்பந்தன் பத்திரிகையை பார்த்தபடி சிறையில் வாடும் கைதிகளை பற்றி பேசியது முகநூலில் உள்ளது

நாம் நம்பிய தமிழ்த் தலைவர்கள் பெயர் மாறினாலும் ஒரேமாதிரியான நிழல்கள் போல் தொடர்வதை காட்டவே இந்த சம்பவத்தைக்குறிப்பிட்டேன்.

மனிதர்களின் நிழல்களில் உருவ வித்தியாசம் தெரிவதில்லைத்தானே?

உண்ணாவிரதத்தின் போது முதல் இரண்டு நாளிலும் விடுதலைப்புலி இயக்கத்தினரில் முக்கியமானவர்கள் வரவில்லை என்பது ஒரு குறையாகத் தெரிந்தது. அவர்களும் ஏற்றுக்கொண்டே இந்த உண்ணவிரதம் அரங்கேறியது

தமிழகத்தில் இருந்த காலத்தில் எப்பொழுதும் சிலர் என்னுடன் இருப்பார்கள் அவர்கள் இயக்கத்தவர்களாகவோ இல்லை மருத்துவ நிலயத்தில் என்னுடன வேலை செய்பவர்களாகவே இருக்கும்.
மூன்றாம் நாள் மாலை ஏதோ வேலை செய்து கொணடிருந்த

என்னிடம் சில மட்டக்கிளப்பு நண்பர்கள் ‘அண்ணே காசியண்ணை வந்திருக்கிறார்’

‘சரி அவரை கூட்டிக்கொண்டு வந்து பந்தலில் இருந்துங்கோ. நான் வந்து பேசுகிறேன்’ என்kasi ananthanறு சொல்லி விட்டு, மீண்டும் அவர்களிடம் சொன்னேன் விடுதலைப்புலிகளும் சேர்ந்து கூட்டாக இருக்கிறபோது அந்த வவுனியாவில் ஏன் ஈபி ஆர் எல் எவ் தோழர் ஒருவரை சுட்டார்கள் எனக்கேள். அவர்களும் போராடத்தானே வந்தார்கள்?’

அக்காலத்தில் வவுனியாவில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இராணுவப் பயிற்சி பெற்ற றீகன் என்ற தோழர் ஒருவர் எதுவித காரணமும் இன்றி விடுதலைப்புலிகளால் சுடப்படடிருந்தார்.

மாலை நேரமானதால் வங்காளகுடாவின் அலை மோதுவதற்கு போட்டியாக கடற்கரையில் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். எங்களையும் ஆவலுடன் பார்த்தார்கள். அவர்கள் தலைவர்கள் செய்து கொண்டிருந்த விடயங்களை ஈழத்தவர்கள் ஏன் செய்கிறார்கள் என்ற கேள்வி அவர்கள் மனத்தில் எழுந்திருக்கும்.

எனது பொறுமையும் கடைசி நாளானதால் குறைந்து விட்டது.
வேலைகள் பல முடிக்கவேண்டும் என்பதால் பரபரப்படைந்தேன்.

வந்தவர்களுக்கு நன்றி கூறவேண்டும். உண்ணாவிரதத்தை முடிக்கும் நேரம் வந்து விட்டது பந்தலை கலைக்கவேண்டுமென்பதாலும் என பல விடயங்கள் மனத்தில் இருந்ததால் நம்நாட்டு புரட்சிக் கவிஞரை மறந்துவிட்டேன்.

எல்லா விடயங்கள் முடித்தபின்பு அந்த மட்டக்கிளப்பு நண்பர்களிடம் கேட்டேன் ‘என்ன நடந்தது கவிஞர் காசியானந்தன் வரவில்லையா?’

‘அண்ணே நீங்க என்னை வவுனியாவில் ஈபி ஆர் எல் எவ் தோழரை சுட்டது என் எனக் கேட்க சொன்னதால் நாங்கள் கேட்டோம் அதற்கு அவர் தம்பியிடம் கேட்டு சொல்கிறேன்’ என வந்த ஓட்டோவில் அடையாறு திரும்பிவிட்டார்’ என சிரித்தார்கள்.

பந்தலுக்கு வராமல் சென்ற காசியானந்தனை 2002ல் எஸ் போ நடத்திய சென்னை இலக்கிய மகாநாட்டில் எனது பக்கத்து சீட்டில் இருந்தபோது இன்னும் தம்பியிடம் வவுனியாவில் ஈபி ஆர் எல் எவ் தோழரை ஏன் சுட்டது என்று கேட்கவில்லையா எனக் கேட்க நினைத்தேன்.

இரண்டு விடயங்கள் என்னைத் தடுத்தன.

பக்கத்தில் இருந்த மனைவி மற்றது, அந்த கூட்டத்தில் இருந்து தம்பிடம் கேட்க என எழுந்துபோனால் எனது வண்ணாத்திக்குளத்தை பதிப்பித்த எஸ்போவிற்கு மனம் குழம்பி விடும் என்பதால் அவர் பக்கமே திருப்பாமல் மூன்று மணித்தியாலம இருந்தேன்.

நான் நினைக்கிறேன் மீண்டும் அந்த கேள்வியைக் கேட்டால் ஆனால் ‘அதற்குள் தம்பி 2009 மே18 ல் போய்விட்டது’ எனப் பதில் வரலாம

புதன், 27 ஏப்ரல், 2016

புத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்..



சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.


சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.
அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையில் அதிருப்தியடைந்தார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. ஒரு ஊனமுற்ற மனிதன், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நாலாவதாக ஒரு முனிவன். இக் காட்சிகளினூடாக மனிதவாழ்க்கையின் துன்பங்களை உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், ஒரு துறவியாகத் தீர்மானித்தார். துறவறம் பூண்ட சித்தார்த்தர், யோக நெறியில் கடுந்தவம் புரிந்தார். தன் தவங்களின் மூலம் உயர்ந்த யோக நிலைகளை அடைந்தாலும், உலக வாழ்க்கையின் துன்பங்களின் ஆதாரத்தை அறிய முடியாததால் அதிருப்தி அடைந்தார். எனினும் தவ வாழ்க்கையை தொடர்ந்து கடைபிடித்தார். தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் தவம் புரிவது என தீர்மானித்தார். ஒரு வாரம் கடுந்தவம் புரிந்தபின் பெருஞ்ஞான நிலையை அடைந்து புத்தரானார். இவர் தன்னை தத்தாகதர் என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலை எய்திவர்') என்று அறிவித்துக் கொண்டார். புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்த கயை என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது. வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு புத்தி புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவா்த்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்த சமய நூல்களில் அழைக்கப்படும். அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். தனது 80ஆம் வயதில் புத்தர் குசினாரா என்ற இடத்தில் காலமானார்.















































கௌதம புத்தர் பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார். இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள். சீட பரம்பரையூடாக வாய்மொழிமூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

புத்தரின் கூற்றுக்கள்

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார்.

வியாழன், 21 ஏப்ரல், 2016

வைரஸ் தாக்குதலில் இருந்து உங்களதுபேஸ்புக்கை காப்பதற்கான இலகு வழி

பேஸ்புக் இப்போது பாதுகாப்பை பலப்படுத்திவருகிறது. ஆகவே பேஸ்புக்கை ஹக் செய்வது, ஸ்பாம் போன்ற பிரச்சினைகள் இருக்காது
உண்மையும் அதுதான். பேஸ்புக் கடந்த காலங்களை போல் அல்லாது நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த வருடம் இருந்த பேஸ்புக்கின் பாதுகாப்பு தன்மையையும் இன்றைய பாதுகாப்பு தன்மையையும் ஒப்பிட்டு பார்த்தால் பேஸ்புக் இப்போது பாதுகாப்பு விடயத்தில் அதீத அக்கறை செலுத்தியிருக்கிறது என்பது தெரியும்.

சரி அப்போ இந்த பதிவு எதுக்கென்று கேட்கிறீங்களா? பாதுகாப்பு இந்தளவுக்கு பலப்படுத்தப்பட்டிருக்கிறதால இனிமேல் ஹக்கிங்கோ ஸ்பாம் பிரச்சினையோ குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நேற்று நடந்த ஒரு சம்பவம் அந்த நினைப்பில் மண் அள்ளிப்போட்டுவிட்டது. நேற்று திடீரென்று நண்பரிடம் இருந்து வந்த Message இல் is this your mom என்ற தகவலுடன் ஒரு பேஸ்புக் Application இணைப்பு வந்திருந்தது. அதை கிளிக் செய்தபோது ஒரு Facebook Application இற்கு தேவையற்ற விதத்தில் எனது பேஸ்புக் கணக்கின் பெரும்பாலான உரிமைகளை பயன்படுத்துவதற்கு அனுமதியை கோரியது. சந்தேகப்பட்டு குறிப்பிட்ட அந்த Message ஐ அனுப்பிய நண்பரை தொடர்புகொண்டு கேட்டபோது அந்த Message ஐ தான் அனுப்பவில்லை என்று கூறினார். இணையத்தில் தேடிப்பார்த்தபொழுது அது ஸ்பாம்தான் என்பதை உறுதிப்படுத்தினார்கள்.


மீண்டும் முன்னரைப்போலவே ஒரு சில ஸ்பாம்/ வைரஸ்கள், பேஸ்புக்கின் சில பாதுகாப்பு ஓட்டைகளை பயன்படுத்தி உலாவத்தொடங்கியுள்ளன. ஆகவே முற்றுமுழுதாக பேஸ்புக்கை நம்பிக்கொண்டிருக்காமல் எமக்கான பாதுகாப்பை நாமே ஏற்படுத்திக்கொள்வது சிறந்தது.


வைரஸ் / ஸ்பாம்
என்னை பொறுத்தவரை ஹக்கிங்கை விட இந்த ஸ்பாம் ஆபத்தானது. ஹக்கிங்கால் உங்கள் கணக்கு மட்டும்தான் பாதிக்கப்படும். ஆனால் ஸ்பாம் உங்களை பாதிப்பதோடு உங்கள் மூலமாக உங்கள் நண்பர்களையும் அவர்கள் மூலமாக அவர்களுடைய நண்பர்களையும் என தொடர்ச்சியாக பரவி பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக நீங்கள் இப்படியான ஸ்பாம் இனால் பாதிக்கப்பட்டால், அந்த ஸ்பாம் Automatic ஆக உங்களுடைய பெயரில் உங்கள் நண்பர்களின் Wall இல் செய்திகளை பகிர்கிறது. உங்கள் நண்பரோ நீங்கள்தான் அந்த செய்தியை பகிர்ந்ததாக நினைத்து கிளிக் பண்ணி செல்வார். இது தொடர்ச்சியாக இப்படியே பரவிக்கொண்டு செல்லும்

பேஸ்புக் Timeline இற்கு மாற்றம்பெற முன்னர் இத்தகைய இணைப்புக்களை உங்கள் நண்பர்களின் Wall இலோ அல்லது உங்களது Wall இலோ அவதானித்திருப்பீர்கள். பலர் இதுபற்றி அறிந்திருந்தாலும், இணைப்புக்கள் மாத்திரமே ஸ்பாம் என கருதியிருந்தனர். ஆனால் இதைவிட போலியான பேஸ்புக் குழும இணைப்புக்கள், போலி Fan Page இணைப்புக்கள் என பல வடிவங்களில் பரவி வந்தது.

மேலுள்ள படத்தில் உள்ளதை போன்று விநோதமான, பார்க்கத்தூண்டும் செய்திகளுடனான இணைப்புக்களே உங்கள், உங்கள் நண்பர்களது Wall களில் பகிரப்படுகிறது. இவற்றை கிளிக் பண்ணினால் இருவிதமான செயற்பாடுகள் நடைபெறுகின்றது. குறிப்பிட்ட சில இணைப்புகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை கையாளுவதற்கான உரிமையை கோருகின்றது. பின்னர் உங்களுக்கு தெரியாமலே உங்கள் தகவல்களை திருடிக்கொள்கிறது. சில இணைப்புக்கள் உங்களை பேஸ்புக் தளத்தை விட்டு வேறோர் ஆபத்தான தளத்திற்கு எடுத்து செல்கிறது.

அடுத்து பேஸ்புக்கில் முக்கியமானதொரு ஸ்பாம் Clickjacking அல்லது Likejacking எனப்படும் முறை. மேற்கூறப்பட்டதுபோன்ற சில இணைப்புக்களை கிளிக் பண்ணும்போது உங்களை போலியானதொரு Facebook Page இற்கு எடுத்து செல்லப்படுகிறது. நீங்கள் தற்செயலாக அந்த பக்கத்தில் எங்கேயாவது கிளிக் பண்ண நேர்ந்தால் உடனடியாக அந்த கிளிக் Like ஆக மாற்றப்படுகிறது. இதன் மூலம் உங்கள் கணக்கிற்கு ஸ்பாம் பரப்பப்படுகிறது. உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் சார்பில் தகவல் அனுப்புகிறது. 

Fake Pages


பேஸ்புக்கில் எமது நட்பு வட்டத்தை தாண்டி ஏனையவர்களோடு தொடர்பினை பேணுவதற்கு Facebook Page ஒரு சிறந்த வழி. கூடவே ஸ்பாம் பரப்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த வழி என்பதுதான் கவலைக்குரிய விடயம். இப்படியான போலி பக்கங்களை எப்படி அடையாளம் காண்பது? மேலே உள்ள படத்தை பாருங்கள். இது ஒரு போலி பக்கம். ஏதாவது ஒரு பேஸ்புக் பக்கத்தில் பார்க்கத்தூண்டும் செய்தியின் சாராம்சத்தை தந்து Like பண்ணினால்தான் மிகுதியை பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தால் 100% அது போலி பக்கம்தான்.

இப்படியான பக்கங்களை நீங்கள் Like பண்ண முயற்சிக்கும்போது உங்கள் பேஸ்புக் கணக்கின் தனிப்பட்ட தகவல்களை கையாளுவதற்கான உரிமையை கோருகிறது. விடயம் அறியாமல் நீங்கள் அனுமதி கொடுத்தால் உங்கள் தகவல்கள் திருட்டு போவதுடன் உங்கள் சார்பில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.

Facebook Chat ஸ்பாம்


இதுதான் எனக்கு நடந்த சம்பவம். நண்பர் வட்டத்தில் ஸ்பாம் இனை பரப்புவதற்கு சாட்டிங் ஒரு சிறந்த வழி என்றே சொல்லலாம். Wall இல் பகிரப்படும் இணைப்புக்களை விட சாட் மூலம் பகிரப்படும் இணைப்புக்கள் அதிகம் கிளிக் பண்ணப்படுகின்றன என்பதுதான் உண்மை. இதற்கு முக்கியமான காரணம் Wall Sharing இலும் பார்க்க Chatting தனிப்பட்டு விளங்குவதும், குறிப்பிட்ட அந்த நண்பர் ஆன்லைனில் இருக்கும்போதே ஸ்பாம் இணைப்பு வருவதால் அவர்தான் அனுப்பியிருக்கவேண்டும் என்ற தோற்றத்தை உண்டாக்குவதுமே. இதற்கு உடனடி தீர்வு, இப்படி வரும் இணைப்புக்களை கிளிக் பண்ணமுதல் அனுப்பிய நண்பரை தொடர்புகொண்டு அந்த இணைப்பு தொடர்பாக விசாரியுங்கள், அவர்தன் அனுப்பினாரா என்பதை உறுதிப்படுத்துங்கள். இல்லை எனில் அந்த இணைப்பை அகற்றிவிடுங்கள்.

சர்ச்சைக்குரிய தலைப்புடனான ஆக்கங்கள்

“Something Unbelievable is here, and I can’t believe they let it on the Internet!”  சில சமயங்களில் இதுபோன்ற தகவலுடன் கூடிய ஆக்கம் ஒன்றிற்கான இணைப்பினை கண்டிருப்பீர்கள். இதுகூட ஒரு வகை ஸ்பாம் தான். ஆனால் இது ஏனையவற்றை விட கொஞ்சம் ஆபத்து கூடியது. காரணம் இந்த இணைப்பை கிளிக் செய்தாலே உங்கள் பெயரில் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுவிடும்.

இதுபோன்ற இணைப்புக்களை காணும்போது அந்த இணைப்பின் மேல் Mouse Cursor ஐ கொண்டு செல்லுங்கள்( கிளிக் பண்ணவேண்டாம்). கொண்டு சென்றதும் இணைய உலாவியின் கீழ் Bar இனை பாருங்கள். அதில் அந்த இணைப்பிற்கான உண்மையான URL காட்டப்படும். பெரும்பாலும் அந்த URL ஆனது Short செய்யப்பட்ட URL ஆகவே இருக்கும். உதாரணமாக bit.ly, tinyurl.com, t.co போன்ற URL ஆக இருக்கும். பெருமபாலான Short பண்ணப்பட்ட இணைப்புக்கள் பாதுகாப்பானவை அல்ல.

திங்கள், 11 ஏப்ரல், 2016

கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு


இந்த உலகம் உய்வு பெற வேண்டுமானால் அதில் அன்பு செழிக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பை உலகிற்க்கு போதித்த பல மகான்களின் பெயர்களை வரலாறு அன்போடும் மரியாதையோடும் இன்றும் சுமந்து நிற்கிறது. அந்த மகான்களில் ஒருவரை சந்திப்போம் அவர் வாழ்ந்த வாழ்க்கையை சிந்திப்போம்.செல்வ செழிப்பில் பிறந்து உலக பற்றை துறந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்று அன்பை போதிக்கும் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்றான பெளத்த சமயத்தை நிறுவிய கெளதம புத்தரின் பிறந்த தினம்தான் விசாக தினம். இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் லும்பினி  எனும் ஊரில் கி.மு 563 ஆம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் சித்தார்த்தர். அவர் பிறந்தது மே மாதத்தின் பெளர்னமி தினம். அவரது தந்தை கபிலவஸ்து என்ற நகரின் மன்னனாக இருந்தவர். சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் அவரது தாயார் மகாமயா இறந்து போனார். மகாமயாவின் சகோதரியான மகா கஜபதி சித்தார்த்தரை வளர்த்தெடுத்தார்.  


தன் மகன் உலகை ஆளும் மன்னனாக வேண்டும் என்று விரும்பினார் தந்தை. ஆனால் ஒரு நோயாளி, ஒரு முதியவர், மரணமுற்றவர், ஒரு துறவி ஆகியோரை பார்க்க நேர்ந்தால் சித்தார்த்தர் துறவறம் பூண்டுவிடுவார் என்று அரச சோதிடர்கள் கணித்து சொல்லவே சித்தார்த்தரை அரண்மனையை விட்டு வெளியேறா வண்ணம் வளர்க்கத் தொடங்கினார் தந்தை. பல ஆண்டுகள் வெளி உலகம் தெரியாமல் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து அரண்மனையிலேயே மகிழ்ச்சியாக வளர்ந்தார் சித்தார்த்தர். உலகத்தின் துன்பங்கள் அவர் கண்ணில் படாதவாறு அவர் பாதுகாத்து வளர்க்கப்பட்டார். 16 வயதிலேயே உறவுப் பெண்ணான யசோதாராவுடன் சித்தார்த்தருக்கு திருமணம் நடந்தது. இல்லற வாழ்விலும் மகிழ்ச்சியாக ஈடுபட்ட அவருக்கு ராகுலன் என்ற குழந்தையும் பிறந்தது.

அதன்பின்னர் கணிக்கப்பட்டது போலவே ஒரு முதியவர், ஒரு நோயாளி, மரணமுற்றவ்ர், ஒரு துறவி ஆகியோரை பார்க்கும் நிலை சித்தார்த்தருக்கு ஏற்பட்டது. அவற்றை கண்டு மனம் வேதனைப்பட்ட சித்தார்த்தர் உலகின் பிணிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் என்ன காரணம் என்று ஆழ்ந்து சித்திக்கத் தொடங்கினார். துறவறம் பூண்டு உண்மையை உணர விரும்பிய அவர் தனது 29 ஆவது வயதில் ஒருநாள் இரவில் மனைவியும் மகனும்  உறங்கிய பிறகு எவருக்கும் சொல்லாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். காவி உடை அணிந்து காட்டில் அலைந்து திரிந்த அவர் சில முனிவர்களிடம் பாடம் கற்கச் சென்றார். தங்கள் உடலை வருத்தி கடுமையான தவம் புரிந்தால் மட்டுமே ஞானம் பெறலாம் என்று எல்லா முனிவர்களுமே கூறினர். அதனை கேட்டு பல ஆண்டுகள் தன் உடலை வருத்திக் கொண்டார் சித்தார்த்தர்.

உணவை படிப்படியாக குறைத்துக்கொண்டு கடைசியில் ஒரு நாளுக்கு ஒரு பருக்கை சோறு மட்டுமே உண்ணுமளவுக்கு வந்தார், உடல் எலும்பும் தோலுமானது. ஆனால் அதுபோன்ற கடுந்துறவால் உடல் சோர்ந்து மூளையும் சோர்வடைவதால் உண்மையை அறிய அதுவல்ல வழி என்று உணர்ந்தார். மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினார் அவர் வழக்கமாக உணவு உண்ணத் தொடங்கிதைப் பார்த்த அவரது ஐந்து சீடர்கள் அவர்மேல் நம்பிக்கை இழந்து அவரைவிட்டு விலகினர். ஆனால் தான் தேடிய உண்மைகளை கண்டறிய தனிமையில் கடும் சிந்தனையில் நீண்ட நேரங்களை செலவிடத் தொடங்கினார் சித்தார்த்தர்.

To watch Biography of  Gautama Buddha  in YouTube

கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு  யூடுபில் பார்க்க




ஒருநாள் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது தான் தேடிய கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டதாக உணர்ந்தார் சித்தார்த்தர். அவ்வாறு ஞானம் பெற்றபோது அவருக்கு வயது 35. அதற்கு பிறகுதான் அவர் 'புத்தர்' என்று அழைக்கப்பட்டார். அவர் ஞானம் பெற்ற இடம் பீஹாரில் போத்ஹையா என்று அழைக்கப்படுகிறது. அடுத்த 45 ஆண்டுகள் வட இந்தியா முழுவதும் பயணம் செய்து தான் உணர்ந்த உண்மைகளை போதித்தார் புத்தர். அவரது போதனைகளை நான்கு உயர் உண்மைகள் என்று அழைக்கின்றனர் பெளத்தர்கள். 
முதலாவது உண்மை மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது.
இரண்டாவது உண்மை அந்த துன்பத்திற்கு காரணம் தனனலமும், ஆசையும்.
மூன்றாவது உண்மை மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்.
நான்காவது உண்மை மனிதன் தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டு வகை பாதை உண்டு.

நேர்மையான கருத்து, நேர்மையான எண்ணம், நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான சித்தம், நேர்மையான தியானம் ஆகியவையே அந்த எட்டுப்பாதைகளாகும்.

புத்தர் தனது முதல் போதனையை வரனாசிக்கு அருகில் உள்ள சரனாத் என்ற பகுதியில் நிகழ்த்தினார். அவரது போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுதப்படவில்லை. அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் வரையும் எழுதப்படவில்லை. புத்த மதத்தில் சில கிளைகள் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணம். தற்போது பெளத்த மதத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு ஒன்று தேரபதா பிரிவு அது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. மற்றொன்று மகாயானம் இந்த பிரிவு திபெத், சீனா, வடஆசியா ஆகியவற்றில் செழித்தோங்கியது. 

ஆசையே துன்பத்திற்கு காரணம், அறியாமையும் சாதிப் பிரிவுகளுமே துன்பம் அனைத்திற்கும் காரணம் என்பதுதான் புத்தரின் அடிப்படை போதனை. பண்பால் ஒரு மனிதன் மதிப்பிடப்பட வேண்டுமே அன்றி பிறப்பால் அல்ல பிறக்கும் போதே எவரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிறப்பதில்லை அவனவன் செய்கையாலயே அது நிர்ணயிக்கப்பட வேண்டும் என புத்தர் வலியுறுத்தினார். கிட்டதட்ட 80 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிய போதனைகளை தந்த புத்தர் கி.மு 483 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஸி நகர் என்ற இடத்தில் காலமானார். 

புத்தர் பிறந்தது, ஞானம் அடைந்தது, இவ்வுலக வாழ்வை நீத்தது அனைத்துமே ஒரே தினத்தில்தான். அதாவது மே மாதத்தின் பெளர்னமி தினத்தில்தான் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தான் விசாக தினத்தை பெளத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். 

எல்லா மதங்களும், சமயங்களும் புத்தம் சொன்ன அன்பைதான் போதிக்கின்றன. அன்பு என்பதே தெய்வமானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. இன்றைய அவசர உலகில் அன்பு செலுத்த மறவாதோருக்கும், அன்பை போற்றி வளர்ப்போருக்கும் வானம் வசப்படும் என்பதுதான் எல்லா மதங்களும் கூறும் அடிப்படை உண்மையாக இருக்கும்.எனவே நாமும் எல்லா உயிர்களிடமும் தொடர்ந்து அன்பு செலுத்துவோம் அதன்மூலம் நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்துவோம். 

To watch Biography of  Gautama Buddha  in YouTube

கெளதம புத்தர் வாழ்க்கை வரலாறு  யூடுபில் பார்க்க


ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

சமுர்த்தி திட்டமும், பொறுப்பற்ற உத்தியோகத்தரின் பொறுப்பற்ற தன்மையும்: பொறுப்புக் கூறுவது யார்

சமுர்த்தி திட்டம் வறுமையை இல்லாமலாக்கி பொருதாரச் செழிப்பினை மேம்படுத்தும் திட்டம். நாட்டின் அடிப்படை வசதிகளை கண்டிராத மக்களின் வசதி வாய்ப்புக்களை மேம்படுத்தி மகிந்தசிந்தனையின் செயல் வடிவத்தை அனைவரும் நுகர்ந்து ஆசியாவின் ஆச்சரியமிக்க நாட்டைக் கட்டியெழுப்பிடத் துடிக்கும் இன்றைய அரசினதும், அதன் தலைவரினதும் கனவுகளுக்கு சிலர் தடையாகவும், அதனை கொண்டுசெல்வதிலுள்ள ஆர்வமின்மையும், தொழிலில் பற்றும் அற்றுக் காணப்படுவதன் காரணமாக மக்கள் அரசுமீதும், உயர் அதிகாரிகள் மீதும் பழிபோடுகின்ற நடைமுறை நாட்டில் பரவலாகவே பேசப்படுகின்ற ஒருவிடயமாகும்.அதிலும் கிராமங்களில் குறிப்பாக ஏழைகள் அதிகமாக வாழுகின்ற மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்கும் இடங்களில் அதிகாரிகளின் அசமந்தத் தனத்தினால் அரசை விமர்சிக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் கூறப்படுகின்றது. அரசின் சம்பளத்தை மாதாந்தம் சுளையாக பெற்றுக் கொண்டு அரச தொழிலை இரண்டாந்தரமாகவும், தன்னுடைய தனிப்பட்ட தொழில்துறையை முதலாந்தரமாகவும் கொண்டுள்ளமையினால்தான் இத்தகைய நிலமை உருவாகின்றது.
உண்மையில் அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற எத்திட்டமும் வெற்றியடைய வேண்டுமாக இருந்தால் மக்களுக்கு முழுமையாக அத்திட்டத்தின் பயன் சென்றடைய வேண்டும். கொழும்பிலிருந்து அமைச்சு மட்டத்தில் உயர் அதிகாரிகள் திட்டமிட்டு பிரதேசங்களுக்குச் அத்திட்டம் செல்கின்றபோது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோலாகிவிடுகின்றது. இதனை ஒழித்துக் கட்டவேண்டும். தன்னுடைய பலம் பலவீனத்தை உணர்ந்து தொழிப்பட வேண்டும். அதிகாரிகள் மக்களுக்கான சேவையை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். அதற்காகவே மக்களின் வரிப்பணம் சம்பளமாக அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதற்கான செயற்பாடுகளை மனசார செய்கின்றோமா? என்றால் கிடையவே கிடையாது. அதற்குக் கூறும் காரணங்கள் பல அதாவது 'அரசாங்கத்தின் சம்பளம் குடும்பத்தை நடாத்தப் போதுமா? அதற்காகத்தான் ஏனைய தொழில்களைச் செய்கின்றோம்' என்று கூறுவர். வேறு தொழில் செய்வதானாலும் எமக்குரிய கடமை நேரம் தவிர்ந்த நேரத்தில் மேற்கொள்ளலாம். அதனை விடுத்து எந்தத் துறையாக இருந்தாலும் அரசஅதிகாரிகள் அசமந்தமாக நடப்பதன் காரணமாக மக்கள் கஷ்டத்திற்குள்ளாகின்றார்கள் என்பதை சற்று கவனத்திற் கொள்வது சாலச்சிறந்ததாகும்.
அந்த அடிப்படையில் வறுமையைப் போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சமுர்த்தித் திட்டத்திற்குள் இணைந்து கொண்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிலரின் பொறுப்பற்ற தன்மை காரணமாக அரச தொழிலை இரண்டாந்தரத் தொழிலாகவும் தன்னுடைய சொந்தத் தொழிலை முதன்மைப்படுத்தியும் செய்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அடிப்படை வசதியற்ற மக்களுக்காக, வறுமையிலிருந்து விடுதலை பெறத் துடிக்கும் அந்த மக்களுக்காக எதனையும் செய்யாது உலாவருகின்ற சில சமூர்த்தி உத்தியோகத்தர்களின் (ளுனுழு) பொறுப்பற்ற தன்மையினை பிரதேச செயலாளர்கள், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்கின்ற அதிகாரிகள் சரியான முறையில் மேற்பார்வை செய்யாததன் விளைவு, அரச நிதியினையும், அரசின் கொள்கையினையும் துஷ்பிரயோகம் செய்கின்றார்கள் என்றும் கூறகின்றனர் அம் மக்கள்.
குறிப்பாக தென்கிழக்குப் பிரதேசத்திலுள்ள ஒரு பிரதேச செயலகத்தின்கீழ் சேவையாற்றுகின்ற (ஆட்டோ றைவரான) சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் தினமும் காலை தொடக்கம் மாலை நேரம் வரையிலும் தன்னுடைய முச்சக்கர வண்டியின் ஓட்டுநராக இருந்து தொழில் செய்கின்ற இழிநிலையைக் காணுகின்றபோது இவருடைய பிரதேசத்து ஏழை மக்களின் நிலைமையை என்னவென்று கூறுவது. இந்த அதிகாரியைத் தேடி அவருடைய பிரதேசத்து மக்கள் பிரதான வீதியில் அவர் ஆட்டோவை வைத்திருக்கும் ஆட்டே கூடத்திற்கு வந்து மக்கள் சந்திக்க வேண்டியிருப்பதாகவும், மக்களின் பணியில் எவ்விதமான அக்கரையுமற்று இவர் காணப்படுகின்றார். இவரைப்பற்றிய முறைப்பாடுகள் பலதடவைகள் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும் அதிகாரிகள் யாரும் கவனம் கொள்வதில்லை. குறிப்பாக இப்பிரதேச செயலகத்தின் பகுதிகளின் கீழ் பல சிறிய சிறிய கிராமங்களும், ஒரு சிங்களக் கிராமத்தையும், ஒரு தமிழ் கிராமத்தையும் உள்ளடக்கிய இப்பிரதேசத்தில் இவருடைய பிரிவு மாத்திரம் எவ்விதமான முன்னேற்றமும் இன்றிக் காணப்படுவதாக மக்கள் கவலைபடக் கூறுகின்றனர்.
கடந்த அரசின் தலைவியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது இதற்குரிய உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். முழுமையாக அரசியல் பின்னணியில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இத் தொழில் வழங்கப்பட்டிருந்தாலும் அத்திட்டத்தில் சில பிழையான நபர்களும் நுழைந்துவிட்டனர். அந்த பிழையான நபர்களாக இவர்களைப் போன்றோர் இருப்பதன் காரணமாகத்தான், அத் தொழிலின் மகத்துவத்தை உணராததன் விளைவுதான், அரச நிதியும், அரசின் திட்டங்களும் சரியான முறையில் மக்களைச் சென்றடைவதில் தாமதமும், குறைவும் ஏற்படுகின்றன. இவ்வாறு தட்டிக் கழித்துச் செயற்படுகின்ற உத்தியோகத்தர்களுக்கு எத்தகைய எதிர் நடவடிக்கைகளும் மேற்கொள்ள அதிகாரிகளும் முன்வருவதில்லை. இது தொடருமானால் பிழைகள் சங்கிலிபோல் தொடரும். இதன் பின்னர் மக்கள் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளை விமர்ச்சிக்கத் தொடங்குவர். உரிய அதிகாரிகள் இந்தகைய நபர்களைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவர்களின் பெயர்களையும், பிரதேச செயலகத்தினையும் நேரடியாகக் கூறாது தவிர்த்துக் கொள்கின்றேன். இதற்குப் பின்னரும் இது தொடருமானால் பெயர்களுடன் கட்டுரை தந்திமகனால் வெளிப்படுத்தப்படும்.
வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஆரம்பமும், பின்னணியும் :
வறுமை குன்றிய செழிப்பான இலங்கைத் தேசமொன்றினைக் கட்டியெழுப்புதல் எனும் நோக்கும், பொது மக்களின் துணையுடன்; கூடிய அபிவிருத்தியொன்றின் ஊடாக வறுமை குன்றிய நிரந்தர தேசிய அபிவிருத்தி ஒன்றிற்காக பங்களிப்புச் செய்தல் எனப்படும் பணிக்கூற்றையும் நோக்காக் கொண்ட இலங்கையின் சமுர்த்தி அதிகாரசபையானது கடந்த 1995 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சமுர்த்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு, இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் பணிகள் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
சமூகத்திலே பின்தங்கிய குழுக்களில் முழுமையான அபிவிருத்தி ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலம் செழிப்பான இலங்கைத் தேசமொன்றினைக் கட்டியெழுப்புவதனை தமது செயற்பணியாக கொண்டுள்ள சமுர்த்தி செயற்றிட்டமானது இன்று நிரந்தர அபிவிருத்தியின் முன்னோடி செயற்றிட்டமாக பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டமானது அபிவிருத்தியின் நெகிழ்ச்சிகரமான மாற்றமொன்றினை ஏற்படுத்திய முக்கிய முயற்சியொன்றாகக் காணப்படுவதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக தரங்களை சாதகமானதாக மாற்றியமைப்பதற்கு ஒத்துழைப்பு நல்கின்றது.
சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வறியவர்களற்ற செழிப்பான இலங்கை தேசமொன்றினை கட்டியெழுப்பும் நோக்கை அடைவதற்கும், வருமானத்தை ஈட்டக்கூடியவாறான செயற்றிட்டங்களை நாடளாவிய ரீதியில் செயற்படுத்துவதன் மூலம் அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதற்கும் இலங்கை சமுர்த்தி அதிகார சபையினால் வறுமை ஒழிப்பிற்கான சார்க் பிரகடனத்தைப் பின்பற்றி மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் செழிப்புமிக்க நற்புறவு கிராமம் ஒன்றினை உருவாக்கும் நோக்குடன் இந்த நிகழ்ச்சித் திட்டமானது நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய சமுர்த்தி செயற்றிட்டத்தை 1996 ஆம் ஆண்டிலே மக்கள் முன்கொண்டுவருகின்றபோது 28.8மூ ஆகக் காணப்பட்ட இந்நாட்டின் வறுமை விகிதமானது 2009 ஆம் ஆண்டாகும்போது 15மூ ஆக குறைந்திருந்தமையானது வறுமை ஒழிப்பிற்காக பாடுபடும் பிரதான இடைதரகர் என்கிற வகையில் மேற்கொண்டுள்ள சமுர்த்தியதிகாரிகளினதும் பணியானது மிகச் சிறப்பானதாகக் காணப்பட்டமை சிறந்த இவ்வாறு இப்பாரிய தேசியப் பணியினை நிறைவேற்றுவதற்கு உறுதி பூண்ட, நாடு முழுவதும் பரந்து கிடக்கும் சமுர்த்தி குடும்பத்திலிருக்கின்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 25,000 ஆகக் காணப்பட்டது.
இவ்வாறாக வறுமையினை இல்லாமலாக்குவதற்கான மகத்தான பணியினை மேற்கொள்வதற்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மீது கவனம் செலுத்தப்படலாயின. அங்கு, சமுர்த்தி உதவி பெறும் மற்றும் கிராம சேவை அலுவலகர் பிரிவுகள் அடிப்படை அபிவிருத்தித் திட்டமிடல் அலகாகவும் மேற்கொள்ளப்பட்டு இதற்கான நிதியூட்டமானது அரச நிதி மற்றும் சமுர்த்தி வங்கிக் கடன் என்பவற்றின் மூலம் பிரதானமான நிதிப் பங்களிப்பினை கொண்டுள்ளது. இதன் ஊடாக நாட்டின் அபிவிருத்தியை மையப்படுத்திய வகையில் நூற்றாண்டு அபிவிருத்தி நோக்கிய இலக்குகளையும், மகிந்த சிந்தனைத்துவ அடிப்படையிலும் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் ஆன்மீக மற்றும் சமூக அபிவிருத்தி, வாழ்வாதார அபிவிருத்தி. உட்கட்டமைப்பு அபிவிருத்திபோன்ற மூன்று முறைகளின்கீழும் இயங்குகின்றன.
இலங்கை சமுர்த்தி அதிகார சபையானது சமுர்த்தி நன்மைப் பெறுவோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்வாதார அபிவிருத்தியின் பொருட்டு பல்வேறுபட்ட செயற்றிட்டங்களுக்கு அவர்களை ஈடுபடுத்தும் பாரிய முயற்சியினைப் பொறுப்பேற்றுள்ளது. முக்கியமாக விலங்கு வேளாண்;மை மற்றும் கடற்றொழில் நிகழ்ச்சித் திட்டங்களை, சமுர்த்தி உதவி பெறுவோரையும், குறைந்த வருமானம் பெறுவோரையும் இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தியுள்ளது. இங்கு விலங்கு வேளாண்மை மற்றும் கடற்றொழில் நிகழ்ச்சித் திட்டங்களில் நபர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களது வேலை இல்லாப் பிரச்சினைக் குறைதல், பொருளாதார ரீதியில் வலுவடைதல் மற்றும் குடும்பத்தின் போஷணை மட்டம் அதிகரித்தல் என்பன இடம்பெறுகின்றன.
சமுர்த்தி நன்மைப் பெறும் குடும்பங்களை வலுவூட்டும் பொருட்டு வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்;கள் பல செயற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக கைத்தொழில் செயற்றிட்டங்கள் இவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றன. தற்போதைய போட்டித் தன்மைமிக்க சந்தைக்குப் பொருத்தமான கைத்தொழில் உற்பத்திகளை தயாரிக்கும்போது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் அதேபோன்று கட்டட கைத்தொழில் என்பவற்றினையும் அபிவிருத்தி செய்தல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சமுர்த்தி நன்மைப் பெறுவோரினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கைத்தொழில் முயற்சிகளில் நிலவிவரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைனகள் என்பவற்றினை இனங்கண்டு நடைமுறைச் சந்தைக்கு தரமிக்க உற்பத்திப் பொருட்களைத் தயாரித்தல் மற்றும் புதிய கைத்தொழிலாளர்களின் செயற்றிட்டங்களுக்குத் தேவையான தொழிநுட்ப அறிவு, மூலதன உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் என்பவற்றினை பிரதான நோக்காகக் கொண்டு கைத்தொழில் நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
'கிராமத்திற்கு சிறு கைத்தொழில்' என்ற தொனிப்பொருளினை நோக்காகக் கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், உள்நாட்டுச் சந்தையின் கேள்விக்கேற்ப பிரதான மூன்று நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் இது செயற்படுத்தப்படுகின்றது.
  1. சிறிய அளவிலான கைத்தொழில் செயற்றிட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்.
  2. அரிசி தயாரிப்புக் கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்.
  3. முன்மாதிரிக் கைத்தொழில் கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம். ஆகியனவற்றைக் கூறலாம்.
இவ்வாறாக இலங்கையிலே முன்னெடுக்கப்பட்டுவரும் வறுமை ஒழிப்புத் திட்டமாகிய சமுர்த்தித் திட்டம் இன்று சர்வதேச அளவில் ஒரு மகத்தான திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் கூட இத்திட்டத்தை தத்தமது நாடுகளில் சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. எனவே, இத்திட்டம் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் வெற்றிப் பாதையை நோக்கியே நிச்சயமாக பயணிக்கும். இருப்பினும், மக்களின் மேம்பாட்டை இலக்காக் கொண்டு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்ற சந்தர்ப்பத்தில் நிச்சயமாக மக்கள் வெற்றிபெறுவார்கள்.
அதேவேளை இத்திட்டத்தினை மேலும் வலூவூட்டம் செய்வதற்காகவேண்டி இலங்கை சமுர்த்தி அதிகார சபையானது 1995 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. ஊழியர்களின் தொழில் பாதுகாப்புத் தன்மை அப்போது காணப்படாமையினால் ஊழியர்கள் தமது தொழிலின் பாதுகாப்புத் தன் மையினை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன், சமுர்த்தி உதவி பெறுவோரும் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் நன்மைகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 ஆம் ஆண்டிலே முதல் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது வெளியிட்ட 'மஹிந்த சிந்தனை' கொள்கை பிரகடனத்தின் மூலம் சமுர்த்தி நன்மை பெறுவோருக்கு வழங்கும் நன்மைகளை மேலும் பலப்படுத்தி உறுதிப்படுத்துவதாகவும் நன்மைத் தொகையினை மேலும் அதிகரிப்பதாகவும் இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றினை தயாரிப்பதாகவும் குறிப்பிட்டார். அப்போது சமுர்த்தி ஊழியர்களின் கோரிக்கைகளில் ஒன்றான ஓய்வூதியச் சம்பளம், தொழில் பாதுகாப்பு என்பன தொடர்பாக மீண்டும் 2009 ஆம் ஆண்டிலே 'மஹிந்த சிந்தனை' தொலை நோக்கின் மூலம் மேலும் உறுதிப்படுத்தியதுடன் அதன் பிரகாரம் இந்த திவிநெகும சட்டமானது சமுர்த்தி நன்மை பெறுவோருக்கும், குறைந்த வருமானம் பெறுவோருக்கும் மற்றும் சமுர்த்தி ஊழியர்களுக்கும் ஓய்வூதியச் சம்பளம் உள்ளிட்ட ஏனைய பல்வேறு நன்மைகளை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்றாக விளங்கிற்று.
எனவே, அன்று இத்திட்டத்தை பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டபோது அதிக விமர்சனத்திற்கு உள்ளானது. இத்திட்டத்தை அமுல்படுத்துகின்ற அடிமட்ட மக்களுக்கான உத்தியோகத்தர்களாக ஓய்வூதியத்தைப் பெற்றுத் தருகின்றது. ஆனால் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை சுமக்க முடியாதவிடத்து தான் ஒதுக்கிக் கொள்ளவேண்டும். ஒதுங்கவும் முடியவில்லை. சம்பளத்தையும் பெறவேண்டும். தன்னுடைய வாகனத்தை தானே ஓட்டி வறுமானத்தை அதிகரிக்க வேண்டும். ஆனால் பொதுமக்களை ஏமாற்றுகின்ற சமுர்த்தி உத்தியோகத்தராக (இவ்வாறு இருக்கின்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்) இராது, அரசின் ஊழியனாக, தன்னுடைய கடமையை மேற்கொள்கின்ற உண்மையானாக தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். சமூகம் விழித்துக் கொள்ளுமுன் அரச ஊழியர்கள் விழித்துக் கொள்ளுங்கள். இல்லையேல் தன்டனை வழங்கினால் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாதிருக்கும்.

வியாழன், 31 மார்ச், 2016

வைரமுத்துவின் வைரவரிகள்

மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு - சில
மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்
சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு
மோகனமே உன்னைப்போல என்னையாரும் - என்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல - எரி
அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை

கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்
கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்
பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்
வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்
பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்

விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளி
விந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்
சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒரு
தாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்
சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறு
சிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்
கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்
கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்

உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
உடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்
உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது
தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்
இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்
பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்
சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்
சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்
எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்
இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்
மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்
வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்

கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்
காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்
துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடி
தூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்
பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுக
பூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்
கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்
கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்

கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்
குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்
கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளி
குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்
மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணை
முட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி
ஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்
உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி

- வைரமுத்து (தொகுப்பு - தமிழுக்கு நிறம் உண்டு)



வெகுவிரைவில் புதிய பக்கங்களுடன் வைரவரிகளுடன்


பூக்களும் காயம் செய்யும்
போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.



இந்தப் பிரபஞ்சம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும் வாழ்க்கை அவனைக்கூப்பிடுகிறது.  ஆனால், வாழ்க்கைக்கு எதிரான திசையிலேயே அவன் உதிரம் கசியும் கால்களோடு ஓடிக்கொண்டேயிருக்கிறான்.  தேன் கொள்ளப் போகும் ஈக்களுக்குத் தேனே சமாதியாகிவிடுவது மாதிரி, இந்த நூற்றாண்டுமனிதன் தன் தேவைகளைத் தேடுவதிலேயே ஆயுளைத் தீர்த்து விடுகிறான்.
*****
ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்,
அறியாமையின் உச்சமும் அதுவேதானோ?
*****
அடுத்த கிரகங்களின் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டோமே….
பூமியில் எல்லாம் பார்த்தாகிவிட்டதா?
இன்னும் பார்க்கப்படாத பூக்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
*****
சட்டங்களைச் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன;
தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.
*****
இளமையைக் கல்விக் கூடங்களில் தொலைத்துவிட்டு
இதயத்தை விரக்தியில் தொலைத்துவிட்டு
பகலை பூமியில் தொலைத்துவிட்டு
இரவை வானத்தில் தொலைத்துவிட்டு
சின்னச் சின்னக் கனவுகளை
சிகரெட் புகையில் தொலைத்துவிட்டு,
தன்னையே தனக்குள் தொலைத்துவிட்டு
வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு வாலிபர் கூட்டம்.
*****
அறிவு தன் முயற்சியை நிறுத்திவிட்ட இடத்தில்தான்
மூட நம்பிக்கை முளைக்கிறது.
*****
எந்தக் கலை வாழ்க்கையிலிருந்து வரிக்கப்பட்டதோ
அது ஜீவனுள்ளதாய் பிறக்கும்.
அல்லது,
எந்தக்கலை ஜீவனுள்ளதாய் பிறக்கிறதோ
அது வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதாய் இருக்கும்..
*****
காதல் கவிதைகள் ஒரு மொழியின் சிறகுகள்.
எந்த மொழியிலும் காதல் கவிதையைத் தொட்டால் மட்டும் அதன் உயிர் கைகளில் ஒட்டிக் கொள்கிறது.
காரணம் -
வாழும் காதலர்கள் வாழ்ந்த காதலர்களுக்கு ரத்ததானம் வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*****
தனக்குள் இருக்கும் ஒன்றைத் தனக்கு வெளியே தேடும் தேடல்தான் காதல்.
*****
வாழ்க்கையின் வெற்றிடத்தைக் காதலால் நிரப்புங்கள்.
வாழ்க்கை என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைக் காதல் அகராதியில் கண்டுபிடியுங்கள்.
காதலியின் உள்ளங்கையில் கவிதை எழுதுங்கள்.
காதல் கவிதைகளால் தமிழின் எடையை அதிகரியுங்கள்,
காதல் மனிதனின் வரமல்லவா?
கவிதை மொழியின் உரமல்லவா?
*****
சப்தம் கடந்த சங்கீதம் காண
வார்த்தை கடந்த கவிதைத்தேட
வர்ணம் கடந்த ஓவியம் பேண
மனசை ஆற்றுப்படுத்துங்கள். 



வாழ்வெனும் கடலை
மூச்சுமுட்டக் குடி
ஊன் உருக்கு
உள்ளொளி பெருக்கு

மெய்ப்பதம் தேடு
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை

உலகம் உன்மீது திணித்த
முன் முடிபுகள் அழி
****
நீயென்று கருதிய
நீயழிந்தொழிய
நீயல்லாத நீதான் நீ
****
மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
மலை பறித்த பள்ளத்தில்
கடல் அள்ளி ஊற்றியது
பூகோளம் தெரியாத பூகம்பம்!
****
ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்

வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்

முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்

வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்

எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்

உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்

பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்

புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்
****
எப்போதெல்லாம் நான்
சாகவில்லையென்பதற்குச்
சாட்சி கோரப்படுகிறதோ

அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும்
****
உடைந்தகுடம் வழியே
வழிந்தோடும் தண்ணீர்
வாழ்வு
ஒவ்வொரு சொட்டும்
உறிஞ்சற்பாலது
****
மொழியாய் முதிர்ந்தது ஒலி
கவியாய் முதிர்ந்தது மொழி
என்னவாய் முதிரும் கவி?

கண்காணாக் கடவுள்
தான்தோன்றியாகுமெனின்
கண்காணும் பிரபஞ்சம்
தான்தோன்றியாகாதா?

உணர்வுள்ள காலை
மரணம்வரப் போவதில்லை
மரணமுற்ற காலை
உணர்விருக்கப் போவதில்லை
சாவுகுறித்தஞ்சுவதேன் சகோதரா?

உண்டாக்கும் அனைத்தையும்
உள்வாங்கும் பூமிக்குத்
தாயெனும் பட்டம் தகுமா?

கேள்விகள் நல்லவை
சூன்யத்தில் பூப்பூப்பவை
வாழ்வைச் சலிக்கவிடாதவை
****
தயிருக்கு வெளியே
வெண்ணெய் திரளாது
வாழ்வுக்கு வெளியே
ஞானம் பிறவாது
****
அடைத்துக்கிடக்கும் ஐம்பூதங்களைத்
திறக்கத்தானே ஐம்புலன்கள்
சாவிகளுக்கே பூட்டுகளிட்டால்
சாத்தியப்படுமா அனுபூதி?
****
ஆளை வீழ்த்தும் பள்ளங்கள் - பல
அவமானங்கள் காயங்கள்
நாளை வருமென அறிந்தாலும் - என்
நடையின் வேகம் நான் குறையேன்

ஞாலம் கருதினும் கைகூடும் - அடி
நானும் அவனும் ஒருகட்சி
காலம் ஒருநாள் சொல்லட்டும் - நான்
கடலை எரித்த தீக்குச்சி